Monday, May 16, 2011

The Most Popular English Proverbs

  • "The best things in life are free."
  • "A stitch in time saves nine."
  • "Still waters run deep."
  • "He teaches ill, who teaches all."
  • "You can't take it with you when you die."
  • "Better untaught than ill taught."
  • "Don't cross your bridges before you come to them."
  • "Soon learnt, soon forgotten."
  • "Even a worm will turn."
  • "It was the last straw that broke the camel's back."
  • "The way to a man's heart is through his stomach."
  • "If the stone fall upon the egg, alas for the egg! If the egg fall upon the stone, alas for the egg!"
  • "Where there's a will there's a way."
  • "Marry in haste, and repent at leisure."
  • "One tongue is enough for a woman."
  • "If you wish good advice, consult an old man."
  • "The best advice is found on the pillow."
  • "All clouds bring not rain."
  • "You can't tell a book by its cover."
  • "Bad news travels fast."
  • "No news is good news."
  • "Live and let live."
  • "Birds of a feather flock together."
  • "Tell me who you go with and I'll tell you who you are."

Hindi Proverbs and their Meanings

Hindi:

Bandar kya jaane adark ka swaad

English: 

What does a monkey know of the taste of ginger?

Meaning: 

someone who can't understand can't appreciate.

Hindi:

Door ke dhol suhavane lagte hain

English :

The drums sound better at a distance

Meaning :

We tend to like the ones we don't have

Hindi:

Ghar ki muragi, dal barabar

Meaning : Self possessions are always undermined and other's possessions seem better.


Hindi:

Andhoon mein kaanaa raja.

English :

A one-eyed man is king amongst blind men.

Hindi:

Anth bhala to sab bhala.

English : If the end is good, everything is good.

Meaning: All's well that ends well.

Hindi:

Okhali mein sir diyaa to musal se kya Darana.

English:

If you have put your head into the mortar then why fear of the pounder.

Meaning: 

if you have started a difficult task, don't bother about what's going to happen. 

Hindi:

Anth bhala to sab bhala.

English :

If the end is good, everything is good.

Meaning : 

All's well that ends well.

Hindi:

itnee Lambi Chadar ho Utna hee pair failana Chahiye

English :

Stretch your legs only till the size of your Counter pan.

Meaning : Limit your Spending To your Earnings

Hindi:

Oont ke Muh mein Jeera.

English:

Small cumin seed in a camel's mouth.

Meaning :

Too small an amount for a very large need.



English Proverbs with their Meanings

Proverb:

‘If you have lemons, make lemonade’ is a mantra in today’s world. 

Explanation :

Use the best things you have and settle for something handy. ‘Something is surely better than nothing.’

Proverb:

‘Beauty is skin deep’.  

Explanation : 

Mere pleasant looking people are the most deceptive. Values, principles and humane nature is a more reliable trait.

 Proverb:

‘It is no use crying over spilt milk’

Explanation : 

This means what has been done and begone is a past. Forgetting and forgive makes living easy.

Proverb:

‘Robbing Peter to pay Paul’  

Explanation : 

This seems another way to juggle the problems of life. This causes more confusion and surely not the right way to manage.

Proverb:

‘When the cat is away, the mice will play,’ 

Explanation :

 This is the best way to explain indiscipline. Governance is necessary as without rules each one will have their own way.

 Proverb:

‘Great minds think alike’. 

Explanation : 

Success is often the meeting of ideas and marriage of like minds.

Proverb:

‘Teach an old dog new tricks’. 

Explanation : 

Though learning is a process in life, one cannot mend the crooked ways or negative traits of a person completely.

Proverb:

‘Honey catches more flies than vinegar’.  

Explanation : 

This is a sure case that sweetness is preferred for being popular.

Friday, December 4, 2009

மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள்



* எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடககிறதோ அதுவும் நனறாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

* உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது.

* பூமியைப் போல பொறுமையுடனும், வீட்டு நிலையைப் போல உறுதியுடனும் வாழ்ந்து காட்டு.

* நம் நற் செயல்களும் தீய செயல்களும் விடாது நம்மைப் பின் தொடரும்.

* உன் துன்பத்துக்கு காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்கு வேண்டாததைச் செய்யாதே.

* உடலில் நிதானம், மொழியில் நிதானம், எதிலும் நிதானம், இதுவே நல்வழி.

* தீயசெயல்களின் விளைவு உடனே தெரிவதில்லை. மறைந்திருந்து பின்னால் தாக்கும்.

* பேராசையும், தீய ஒழுக்கமும், நம்மைத் தீராத துக்கத்தில் மூழ்கடித்து விடும். தன்னை அடக்குபவனே தலைவன். தன்னலமின்மை, அமைதி, வாய்மை ஆகிய மூன்றும் இன்பம் தரும். மனநிறைவே தலை சிறந்த செல்வம். உடல்நலமே மிக உயர்வான நலன். நம்பிக்கைக்கு உரியவரே மிகச் சிறந்த உறவினர்.

* எதிலும் எப்பொழுதும் கவனமாக இருங்கள்.

* உங்களுக்குள் ஒளியைத் தேடுங்கள். அந்த ஒளி உங்கள் உள்ளிருந்து சுடர் விடுமாறு வாழுங்கள் இதைத் தவிர வேறு ஒளி கிடையாது.

* நான் உங்களுக்குப் பாதையைக் காட்ட மட்டுமே முடியும். ஆனால் நீங்கள்தான் அந்தப் பாதையில் எங்ஙனம், எவ்வளவு தூரம் செல்ல முடியுமென முடிவு செய்ய வேண்டும். உங்களுக்குள்ளே உறையும் உள்ஒளி மூலம் உங்களை நீங்களே வழி நடத்திக் கொள்ளுங்கள்.

* செவி வழிச் செயதி கேட்டோ வழி வழியாய் வந்த விஷயஙகள் கேட்டோ பரம்பரையாகப் பரிமாறிக் கொள்ளப்பட்ட விஷயஙகள் கேட்டோ, உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளாதீர்கள்

படித்ததில் பிடித்தவை

1. தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு. - பிரையண்ட்

2. எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம். - கெதே

3. அறிவு என்பது நம்முடைய ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இதயம் நம்முடைய ஒவ்வொரு பகுதியாக இருக்கிறது. - ரிரேஸ்

4. சட்டம் ஒரு சிலந்திக்கூடு. வண்டுகள் அதை அறுத்துக்கொண்டு அப்பால் போகின்றன. ஆனால், பூச்சிகள் அதில் சிக்கிக் கொள்கின்றன.- செக்கோஸ்லோவேகியா

5. செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான். - கர்னல் கீல்

6. தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. - லெனின்

7. வாழ்க்கை என்கிற ஆடையில் நன்மை தீமை என்ற இரு நூல்களும் இருக்கும். - ஷேக்ஸ்பியர்

8. அவரவர் விதி அவரவர் கையிலேயே இருக்கிறது. - விவேகாநந்தர்

9. தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் பூரண அமைதி ஏற்படும். - பெர்னாட்ஷா

10. அன்பு என்பது கண்ணுக்குத் தெரியாத நீரூற்று. அது எப்போது எப்படி தோன்றுகிறது என்பதை நாம் அறிய முடியாது.

விவேகானந்தரின் அமுத மொழிகள்

மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு
நாத்திகனுக்கு தருமசிந்தனை இருக்கலாம். ஆனால் மதகோட்பாடு இருக்க இயலாது. மத்த்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தருமசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.
குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றர்கள் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.

நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதை விட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.

செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனை விட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்து வாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது.
மரணத்தை வென்று, அதறக்குமேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதைனைத் தெரிந்து கொள்ளத்துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல்.

இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும் - பயத்தை உண்டு பண்ணுகிற எதையும் நிற்க வேண்டும். அவற்றுடன் போராடவேண்டும். பயந்து ஓடலாகாது.

மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.
மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும்.

மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு மத்த்திலிருந்து வேறொரு மத்த்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும்.

கடவுளை தாம் விரும்பும் உருவத்தில் ஒவ்வொரு மதப்பழகப்படி ஒவ்வொருவரும் வணங்கலாம்.

உடல் இன்பமே பெரிதன்று. வறுமையில் வாழ்ந்தாலும், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று கஷ்டத்தில் வாடுவதை விட, பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு, தன் நலத்தைக் குறைத்து, பிறர் நலத்தை பேண வேண்டும்.

பணி செய் அதற்குப் பெயர் தவம். தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதை தாழ்வாக எண்ணாதே அவ்வாறு உழைக்கும் பணி தெய்வத்திற்குச் செய்யும் திருத்தொண்டைப் போன்றது.

இறைவனே இன்று உலகாமகப் பரந்து விரிந்து நிற்கின்றான். கடவுளை நினைத்து பக்தியோடு பணி செய். அதுவும் ஒழ்க்கத் தோடு பணி செய். ஒழுக்கம் என்பது தன்னலமற்ற சேவை. அதுவே சிறப்பு. அந்த சிறப்பை அடைய மனிதன் முயல வேண்டும்.

நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். ஏழைகள், துன்ப்ப்படுவோர் எல்லோருமே கடவுள் தான், அவர்களை ஏன் முதலில் பூஜை செய்ய்க்கூடாது?
உடல் வலிமையுடையவன், வலிமை குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும்.

செல்வம் படைத்தவன், செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்ததை விட வேண்டும்.

முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போடு நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தது. ஆனாலும் ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோக்ஷமில்லை.

பாவம் என்பது ஒன்று உண்டு என்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.

சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.

நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும்.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய்.

இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். ஆனால், அடக்கப்பட்டுச் சரியான வழியில் செல்கின்ற மனம் நம்மை என்றென்றைக்கும் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும்.

எப்போதும் விரிந்த மலர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவது மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது.

எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.

யார் ஒருவன் தனக்குள் கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான் அடைகிறான்.

குருவுக்குப் பணிந்து நடந்தாலும் பிரம்மச்சரிய ஒழுக்கத்தை நன்கு கடைப்பிடித்தலம் வெற்றிக்கு வழிகளாகும்.

சிங்கங்களே சீறி எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.

போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே, மிருகத்தைப் போல வாழாதே!

இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே! என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லவலிமை பெற்றவன், உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் சாதிக்ககூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.

பயங்கரத்தை எதிர்த்து நில். ஓர் அடியும் பின்வாங்கக்கூடாது. கருத்து இதுதான் - எது வந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்து நட்சத்திரங்கள் பிறழட்டும். முழு உலகமும் நமக்கு எதிராக எழுந்து எதிர்த்து நிறகட்டும். குறிக்கோளும் கொள்கையும் மாறாமல் முன்னேறிச் செல்.

நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனத் இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.

நீ வீணாக அழுவதேன்? மரணமோ, நோயோ உன்கில்லை. நீ அழுவதேன்? துன்பமோ, துரதிர்ஷ்டமோ உனக்கு கிடையாது. நீ ஏன் அழ வேண்டும்? மாற்றமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. மக்கள் என்ன வேண்டுமானாலும் இரு. பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் காலடியில் பணிந்து கிடக்கும்.

பகுத்தறிவைக் கொண்டவன் பகவானை அடைய வழிகளை நுட்பமாகத் தேடுகிறான். தனது உடம்பால் உழைத்து இறைவனை அடைய நினைப்பவன் சேவாமார்க்கத்தை நாடுகிறான். சமூக சேவையில் இறைபணியைத் தேடுகிறான். மந்திரப் பூர்வமாக நாடுபவன் வீட்டிலும் ஆலயத்திலும் பூஜிக்கிறான்.

கர்மயோகம்: தனது கடமைகளைச் செய்வதாலும் அதற்குரிய செயல்களை ஆற்றுவதாலும் இறை உணர்வைப் பெறுவது.

பக்தியோகம்: தனது அந்தரங்கமான பக்தி உணர்வால், இறைவனை நினைந்து அவரைத் தனக்கே உரியவராக அடைய முற்படுவது.

ராஜயோகம்: மனத்தைக் கட்டுப்படுத்தி, உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி இறைவன்பால் தனது சிந்தனையை வழிப்படுத்தி, இறை உணர்வைப் பெறுவது.

ஞானயோகம்: தனது அறிவாற்றலால் பல்வேறு சாஸ்திர நூல்களைப் படித்தும் ஞானபோதனைகளைப் பெற்றும், இறைவனை உணர்ந்து அவரை அடைய முற்படுவது.
இந்தச் சீதையெனும் இலட்சியத்தைப் போன்று வேறில்லை. எது எது பரிசுத்த மனதோ, எது எது புனிதமானதோ பெண்ணினத்திலே பெண்மை என்ப்போற்றப்படுவது எதுவோ, அதற்குப் பெயர்தான் சீதை! குரு ஒருவர் ஒரு பெண்மணியை ஆசீர்வதிக்க வேண்டுமென்றாலும், ஒரு குழந்தையை வாழ்த்த வேண்டுமென்றாலும், சீதையைப் போல் இரு என்ற கூறி ஆசீர்வதிப்பார்.

மனிதனாக வாழ முயற்சி செய். தோல்விகளை ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.

பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் த்த்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும்.

ஒரு கழுதை மீது நூலகத்தை ஏற்றிவிட்டால் அது பண்டிதன் ஆகிவிடாது. நூல்கள் நிறைய படிப்பதனால் எவனும் பயன்பெற முடியுமா?

நம் நாட்டுப் பொன்னை பித்தளையாகவும், அயல்நாட்டுப் பித்தளையைத் தங்கமாகவும் கருதக்கூடிய வகையில் நம் நாட்டு மக்கள் தங்கள் கல்வி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். நவீன காலமேற்றிசைக் கல்வி, நம் நாட்டு மக்களை இவ்வாறு செய்திருப்பது மந்திர மாயம் போல் இருக்கிறது.

ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப் பெறுவது போலவே, தீமையிலிருந்து அறிவைப் பெறுகிறான்.
உண்மையாக எதையும் துறக்கலாம். ஆனால், எதன் பொருட்டும், உண்மையைத் துறக்கலாகாது.

எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும், தவிர்க்க முடியாத தவறுகள் சில ஏற்படவே செய்யும்.

பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிக்கொணர முயலுங்கள். பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள். பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள்.

விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன.

பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.

கல்வி என்பது ஒருவனுடைய மூளயல் பல விஷயங்களைத் திணிப்பதுன்று, அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் நன்றாக ஜீரணமாகிக் பயன்படவேண்டும்.
ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும்.

ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின், அவனது பெருஞ்செய்ல்களைப் பார்க்க வேண்டாம். அவன் தன் சாதாரணக் காரியங்களை எங்ஙனம் செய்கிறான் என்பதை கவனிக்க வேண்டும்.

மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.

நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி, அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி, அல்லது யாராக இருந்தாலும் சரி. உன்னைடைய சுகதுக்கங்களை மறந்து நீ வேலை செய்க. இது ஒன்றே இப்பொழுது நீ கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடமாகும்.

எல்லாப் பேய்களும் நம்முடைய மனத்திலே தான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும்.
இன்பங்களை அனுபவிக்கும் ஆசையை முற்றிலும் மனத்திலிருந்து நீக்காமல் ஆன்மிக வாழ்வில் எதையுமே அதையமுடியாது.

இன்பங்கள் என்ற உன்னுடைய எல்லா ஆசைகளையும் சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டு எப்போது உன்னால் தியாகம் செய்ய முடிகிறதோ அப்போது நீ ஒரு புத்தர் ஆகிவிடுகிறாய்.

மனிதன் இயற்கையை எதிர்த்துப் பொராட ஆரம்பிக்கிறான். அதில் அவன் பல தவறுகளைச் செய்கிறான். அதனால் துன்பப்படுகிறான்.

வெற்றிப் பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான். பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும்.

நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை எண்ணிச் சிரிப்போம்.

பெண்ணுக்குரிய அச்சம், நாணம் போன்ற பண்புகளை இந்தியப் பெண்களிடம் மட்டுமே நாம் பார்க்கமுடியும். அத்தகைய அற்புதமான குணங்களை உடைய பெண்களை முன்னேற்ற உங்களால் முடியவில்லை.

நூல்களைக் கற்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஆனாலும் அனுபவமே சரியான ஆசான். அதுவே உண்மையாம கல்வி.

நூல்நிலையம் ஒன்றில் இருக்கும் எல்லா நூல்களையும் ஒன்றுவிடாமல் படிக்கும் புத்திசாலியைவிட, ஐந்து நல்ல, உயர்ந்த கருத்துகளை அறிந்து கொண்டாலே போதும், நீயே மெத்தபடித்தவனாக இருப்பாய்.

பூரணத்துவம் பெற்ற மனிதன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெறுவதற்கு எந்தப் பொருளை அதைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.
எல்லா ஒழுக்கத்திற்கும், எல்லா ஆன்மீக உணர்விக்கும் பிரம்மச்சரியமே ஆதாரம்.
காயம்படாதவன் தான் தழும்மைக் கண்டு நகைப்பான்.

உடலிலும் மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது.
நீ உன்னைப் பலவீன்ன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.

வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து உருகி நிற்கும் காதலனின்ம மனநிலை நமக்குத் தேவையே இல்லை. மாறாக வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் எதிர்த்துநிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது வேண்டும்.

கோழைகள் எப்போதும் வெற்றியடைய முடியாது.

சிவன், விஷ்ணு என்றெல்லாம் எத்தனையோ நூறு பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே கடவுள்தான். பெய்ர்கள் வேறு. ஆனால் இருப்பது ஒன்றுதான்.

அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.

துருப்பிடித்தத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.

வழிபாடுகள் எந்தப் பெயரிலும் இருந்தாலும் சரி. எந்த வித்த்தில் இருந்தாலும் சரி. அவை அனைத்தும் ஒரே கடவுளக்குச் செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் உணர வேண்டும்.

இந்தியாவின் பாமர மக்களாகிய இந்த ஏழை எளியவர்களை நாம் உயர்த்த வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கு உரிய கருத்துக்களை நம்பிக்கயோடும், சிரத்தையோடும், அன்பான சொற்களால் அவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்கு கல்வியறிவைப் புகட்டு. இதுவே உனது கடமையாக்க் கொள்.

எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தல் பலவீன்னாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுகிறாய்.

மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மத்த்தின் அடிப்படை இலட்சியமாகும்.

தனது குழந்தைகளில் யாரேனும் ஒருவருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால் அதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய்.

எவன் ஒருவனுக்குத் தன்னம்பிக்கை இல்லையோ அவன்தான் நாத்திகன்.

ஸ்ரீ ரமணரின் பொன்மொழிகள்


‘நான்’ என்ற அகந்தை எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்ற தவறான கருத்தை உண்டாக்குகிறது. உண்மையில் நாம் ஒரு கருவியே; கர்த்தா அல்ல. இதை உணர்ந்துவிட்டால் , அகந்தை நம்மிடமிருந்து வெளியேறி விடும்.


எவ்வளவுக்கு எவ்வளவு பணிந்து நடக்கிறோமொ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு.


பகவானுக்கு ருசி முக்கியமில்லை. அடியார்களது பக்திதான் முக்கியம்.


நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு.


பரம்பொருளைத தொடர்ந்து விடாமல் பற்றி நிற்பதே சமாதி எனப்படும்.


புதிய ஆசைகளை வளர்க்காதீர்கள். புதிய வாசனைகளைத் தேடிக் கொள்ளாதீர்கள். அதுவே நீங்கள் செய்திருக்கக்கூடிய தவற்றிலிருந்து மீளுவதற்க்கு உரிய பிரயச்சித்தம் ஆகும்.


பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் எல்லைகள். இந்த இரண்டையும் கடந்து நிற்பதே ஆன்மா அதை உணர்ந்தால் இந்த இரண்டுமே பொருள்ளற்றதாக ஆகிவிடும். தன்னை உணர்ந்த மனிதன் - இந்த நிலைகளைக் கடந்துவிடுகிறான. இறப்பு அவனைப் பாதிப்பதில்லை.


ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் தேடிக்கொள்ளும் நற்பலன்கள் அதிகமாக இருந்தால், அதை ஒட்டி அவனக்கு மரணத்துக்குப் பின் இனிய அனுபவம் ஏற்படுகிறது. கெட்ட பலன்களே அதிகமாக இருந்தால் துன்பம் நிறைந்த அனுபவம் உண்டாகிறது.

நூல்களில் மூன்றுவித தீஷைகள் கூறப்பட்டுள்ளன. ‘ஹஸ்த தீக்ஷை’ என்பது சீடனின் சிரசைத் தொட்டு அருள் புரிதல், ‘சக்ஷதீக்ஷை’ என்பது அருட்பார்வையால் தீக்ஷை அளிப்பது. ‘மானசீக தீக்ஷை என்பது மனதினால் அருள் புரிதல், இவற்றில் மானசீக தீக்ஷையே அனைத்திலும் சிறந்தது”

முயற்சி செய்து மனத்தை எண்ணங்களிலிருந்து விடுவிக்க வேண்டும். அந்த நிலையில் தொடர்ந்து நாம் இருப்போமேயானால் அதுவே நமது சாதனைக்ளுக்கு வழிவகுக்கும்
நம்மால் எதிலும் தனித்து செய்ல்பட முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நமது வலிமை அற்ற மனம் தான்.

தவறான செயல்களைச் செய்துவிட்டு, அகந்தையின் காரணமாக அதை மறைத்தல் கூடாது. எனவே குற்றங்களைச் செய்யும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல ஒழுக்கத்துடன் வாழ்ப பழுகுதலே சிறப்பு.

அறிவின் சொரூபமே சச்சிதானந்தம்.

மனம் அடங்கிய ஜகம் மறையும்

மனம் என்பதோ ஆத்ம சொரூபத்திலுள்ள ஓர் அதிசய சக்தி அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. நினைவுகளையெல்லாம் நீக்கிப் பார்க்கின்றபோது தனியாய் மனம் என்று ஒரு பொருள் இல்லை. ஆகையினா நினைவே மனிதன் சொரூபம். நினைவுகளைத் தவிர்த்து ஜகம் என்பது அன்னியமாயில்லை.


மனதின் சொரூபத்தை விசாரித்துக் கொண்டே போனால் மனம் தானாய் முடியும் .

நான், நான் என்று எண்ணிக் கொண்டிருந்தாலும் கூட அவ்விடத்தில் கொண்டு போய்விட்டுவிடும். மனதில் தோன்றும் நினைவுகள் எல்லாவற்றிற்கும் நான் என்னும் நினைவே முதல் நினைவு. இது எழுந்த பிறகே ஏனைய மற்ற நினைவுகள் எழுகின்றன. தன்மை தோன்றிய பிறகே, முன்னிலை படர்க்கைகளை தோன்றிகின்றன. தன்மையின்றி மன்னிலைப் படர்க்கைகள் இரா!

மனம் எப்படி அடங்கும் என்றால் ‘நான்’ யார் என்னும் விசாரனையினாலேயே, நான் யார் என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் ஒழித்து முடிவில் தானும் அழியும். பிறகு சொரூப தரிசனம் உண்டாம்.

எத்தனை எண்ணங்களை எழுப்பினால் என்ன, ஜாக்கிறதையாய் ஒவ்வொரு எண்ணமும் கிளம்பும் போதே இது யாருக்குண்டாயிற்று என்று விசாரித்தால் எனக்கு என்று தோன்றும்.

நினைவே மனிதன் சொரூபம். நான் என்னும் நினைவே மனத்தின் முதல் நினைவு. அதுவே அகங்காரம்.

மனம் அளவிறந்த நினைவுகளால் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது. நினைவுகள் அடங்க, ஏகாக்கிரகத் தன்மையடைந்து அதனால் பலத்தை அடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம் சுலபமாய் சித்திக்கும்.

தொன்று தொட்டு வருகின்ற சகல விஷய வாசனைகளும் ஒடுங்கிச் சொரூப மாத்திரமாய் இருக்கமுடியமா, முடியாதா என்கிற சந்தேக நினைவக்கு இடம் கொடாமல் சொரூப தியானத்தை விடாப்பிடியாகப் பிடிக்க வேண்டும். தான் பாபி என்னும் எண்ணத்தையும் அறவே ஒழித்து சொரூப தியானத்தில் ஊக்கமுள்ளவனாயிருந்தால் அவன் நிச்சயம் கடைத்ததேறுவான்.

நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டுவிதம், மனம் சுபவாசனை வயத்தாய் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை வயத்தாய் நிற்கும்போது கெட்ட மனமென்னும் சொல்லப்படும்.

உலக விஷயங்களிலும், பிறர் காரியங்களிலும் - மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளுவு கெட்டவர்களாய் இருந்தாலம் அவர்களிடத்தில் துவேஷம் வைக்கலாகாது.

எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனத்தை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலும் இருக்கலாம்.
நான் என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத இடமே சொரூபமாகும். அதுவே மௌனம் எனப்படும். சொரூபமே ஜகம், சொரூபமே நான், சொரூபமே ஈசுவரன், எல்லாம் சிவஸ்வரூபமே.

என்னென்ன நினைவுகள் உற்பத்தியாகின்றனவோ அவற்றை ஒன்றுகூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியம். வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி முத்தை அடையலாம்.

எவன் தன்னையே கடவுளாகிய - சொரூபத்தினடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான்.

குருவின் அருள்பார்வையில் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவாரேயன்றி ஒருக்காலும் கைவிடப்படார். எனினும் ஒவ்வொருவருக்ககும் தம் முயற்சியினாலேயே கடவுள் அல்லது கரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முக்தியடையவேண்டும்.
முக்தியில் விருப்பமுள்ளவனுக்குத் த்த்துவங்களின் விசாரணை அவசியமே இல்லை. பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தப்போல எண்ணிக் கொள்ள வேண்டும்.

கனவில் மனம் வேறொரு தேகத்தை எடுத்துக்கொள்கிறது. ஜாக்ரம், சொப்பனமிரண்டிலும் நினைவுகளும் நாம ரூபங்ககளும் ஏக காலத்தில் நிகழ்கின்றன.

எல்லா நூல்களிலும் முக்தியடைவதற்கு மனத்தை அடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ள படியால் மனோ நிக்ரகமே நூல்களின் முடிவான கருத்து என்றறிந்து கொண்ட பின்பி நூலகளை அளவின்றிப் படிப்பதால் பயனில்லை.

மனம் வெளிவரும்போது துக்கத்தை அனுபவிக்கிறது. உண்மையில் நமது எண்ணங்கள் பூர்த்தியாகும்போதெல்லாம் அது தன்னுடைய யாதஸதனத்திற்குத் திரும்பி ஆத்ம சுகத்தையே அனுபவிக்கிறது.

நிராசையே ஞானம், நிராசை வேறு ஞானம் வேறன்று.

உண்மையில் இரண்டும் ஒன்றே. நிராசை என்பது ஒரு பொருளிலும் மனம் செல்லாமலிருப்பது.

சும்மா இருப்பதற்குத்தான் ஞானதிருஷ்டி என்று பெயர். சும்மாயிருப்பதாவது மனத்தை ஆத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்வதே அன்றி பிறர் கருத்தறிதல், முக்கால முணர்தல், தூர தேசத்தில் நடப்பனவறிதல் ஆகிய இவை ஞான திருஷ்டியாக மாட்டா.

பந்தத்திலிருக்கும் தான் யாரென்று விசாரித்துத் தன் யதார்த்த சொரூபத்தை தெரிந்து கொள்வதே முக்தி.

உலகத்தில் நாம் எதையும் ஒரு பெயரை வதைத்தோ உருவத்தை கொடுத்தோதான் நினைவில் வைத்துக் கொள்கிறோம். கடவுளை நினைத்துத் தியானம் செய்வதற்கும் இப்படி ஒரு வழி முறை தேவைப்படுகிறது.

வெளியே பார்த்ததும், பேசியும் பழகியும், உணர்ந்தே பழக்கப்பட்ட மனத்தை உள்முகமாகத் திருப்புவது என்பது சாதாரண காரியமல்ல.

அப்படிச் செய்வதற்கு இப்படி ஒரு படிக்கட்டு அவசியமாகிறது.

எல்லா உணவுகளுக்குமே ஒவ்வொரு வகையான பாதிப்பு உண்டு. சில உணவு வகைகள் அமைதியைத் தருகின்றன. வேறு வகை உணவுகள் மந்த நிலையையம், தூக்கத்தையும் உண்டு பண்ணுகின்றன. உணர்ச்சியைத் தூண்டும் மாமிச வகையைச் சார்ந்த ராஜஸ உணவையும், மந்தநிலையையும், சோம்பலையும் தூண்டும் தாமஸ உணவையும், நாம் தவிர்க்க வேண்டும். அமைதியைத் தரும் சாத்வீக உணவே தியானத்துக்கு ஏற்றது.

பிராணயாம்ப் பயிற்சி முடிந்ததும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். ஆனால் யோகிகள் படிப்படியாக, இப்படி ஒரு பயிற்சி இல்லாமலே நிரந்தரமாக அமைதியுடன் இருக்கும் நிலையை அடைய விரும்புவார்கள். அதைத்தான் சகஜ சமாதி என்று குறிப்பிடுகிறோம்.

மூச்சு என்பது குதிரையைப் போன்றது. மனம் என்பது அதன் மீது சவாரி செய்து குதிரையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சவாரி செய்பவனும் கட்டுப்படுகிறான். இதுவே பிராணயாம்ம். மூச்சின் இலக்கத்தைக் கவனித்துக் கட்டுப்படுத்துவதன் மூலம் மனத்தில் ஓடும் நினைவுகளும் கட்டுபடுகின்றன.

மகிழ்ச்சி என்பது மனிதனுக்குள்ளேயே இருப்பது தானேயன்றி, வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதன்று.

விதியை வெல்லவும் அதன் பிடியிலிருந்து விலகி நிற்கவும் இரு வழிகளே உண்டு. ஆன்மா விதியால் கட்டுப்படுவதில்லை என அறிதல் ஒரு வழி. இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து நிற்பது மற்றொருவழி.

நகர்ந்து செல்லும்ம வண்டியில், உறங்கிக் கொண்டு பயணம் செய்யும் பிரயாணிக்கு சலனமோ, அசைவுகளோ எதுவும் தெரியாது. ஏனெனில் அவனது மனம் அறியாமை இருளில் ஒடுங்கிக் கிடக்கிறது.

ந்தியின் கரையைச் சேர முயலும் மனிதன் அந்த நீரின் அலையோட்டங்களால் கரைசேர முயலுவது தடைப்படுவதைப் போல, சம்சாரம் என்னும் ந்தியிலிருந்து ஆத்மஞானம் என்னும் கரையைச் சேர விரும்புபர்கள் உலக இன்பங்களால் தடைபட்டு அதை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.

பிறருடைய குற்றங்களைப் பாராமல், குணங்களை மட்டுமே எண்ணிப் பார்க்கும் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இனிமையாகவே அமையும்.

கல்லைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் மூழ்கி முத்தை எடுத்து மகிழ்வதைப்போல, வைராக்கியத்தைக் கொண்டு இதயக்கடலுள் மூழ்கி ஆத்மா என்னும் முத்தை அடைதல் வேண்டும்.

பிறருக்கு நன்மை செய்வதில் ஒருவர் ஈடுபட்டாலே போதும். அவர்களின் இதயத்தில் நன்மை வளரும். நன்மை, அன்பு, கடவுள் ஆகிய எல்லாம் ஒன்றே.

துறவு என்பது அனுபவிக்கப்பட்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எப்போதும் அது இருந்துகொண்டே இருப்பதுதான். வந்து போவதாகத் தோன்றுவது மனத்தின் இயல்புதான்.

விதி என்பதென்ன? இறைவனைச் சரண்டையுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும். எனவே எல்லாப் பொறுப்புகளையும் இறைவனிடமே விட்டுவிடுங்கள். பின்னர் விதி உங்களை என்ன செய்யும்?

ஞானி உலகத்தைக் காண்கிறான். அஞ்ஞானி தான் உலகத்தை வெறுக்கிறான்.

காகம் தன் கண்ணின் மூலம் இரண்டு பக்கங்களிலும் பார்வையைச் செலுத்தும். யானைக்கு அதன் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், இருவிதங்களில் பயன்படுகிறது. பாம்பு தன் கண்களின் மூலம் பார்க்கவும் செய்கிறது. ஒலிகளின் மூலம் கேட்கவும் செய்கிறது. இதைப் போல ஞானி என்பவனுக்கு உறக்கம், விழிப்பு, உறக்கத்தில் விழிப்பு நிலை, விழிப்பில் உறக்க நிலை ஆகிய அனைத்தும் ஒன்றுதான்.

ஒருவன் தன்னைப்பற்றி முதலில் அறிந்துகொள்ள வேண்டும், தன்னைப்பற்றியே சரியாகவும், முறையாகவும் அறிந்து கொள்ள முடியாத ஒருவனால், உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வது முடியாத செயலாகும். அப்படி அறிந்து கொண்டதாக ஒருவன் எண்ணினால் அது, அடிக்கல் நடாமலே சுவர் எழுப்பியதைப் போன்ற செயலாகத்தான் இருக்கும்.

இந்த அருளை பரிபூரண சரணாகதி மூலம் அடையலாம். சரணாகதி சொல்லளவிலேயே நிபந்தனையுடன் கூடியதாகவோ இருக்கக்கூடாது. வழிபாடு என்பது வெறும் சொற்களால் ஆனது அல்ல. அது இதயத்திலிருந்து புறப்பட்டு இதயத்திற்குள்ளே கலந்து விடவேண்டும். இதற்குத்தான் வழிபாடு என்று பெயர். இது தான் அருள்.

எண்ணங்களே மனம்; அந்த எண்ணமயமானதே உலகம். அனைத்தின் மையம் இதயம்.
ராமா என்ற சொல்லில் ரா என்ற எழுத்து ஆன்ம ஸ்வரூபத்தைக் குறிக்கிறது. மா என்ற எழுத்து நான் என்ற ஆணவத்தைக் குறிக்கிறது. ஒருவர் ராமா என்று இடைவிடாது ஜபித்துக் கொண்டேயிருந்தால் மா என்ற எழுத்து ரா என்ற எழுத்தில் ஐக்யமாகி மறைந்து விடுகிறது. ரா என்ற ஸவரூபமே எஞ்சி நிற்கிறது. இந்நிலை ஏற்படும்போது தியானம் செய்யும் முயற்சியும் ஓய்ந்துபோய் தமுத உண்மை நிலையாம் நிரந்தர தியானம் நிலைத்து விடுகிறது.

ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாட வேண்டும். இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை. உள்மனதில் யார் அமைதியை எற்படுத்துகிறார்களோ அவரையே உன் குருவாக்கிக் கொள்.

உடுத்தும் உடையில் மாற்றம் மட்டும் சந்நியாசம் ஆகாது. வீட்டைத் துறப்பதும் சந்நியாசமல்ல. உண்மையில் மனத்திலுள்ள பாசத்தையும் பந்தத்தையும் ஆசையையும் துறப்பதே சந்நியாசமாகும். உலக வாழ்வைத் துறப்பவன் தன் அன்பின் பெருக்கால், உலகையே மூழ்கடிக்கிறான். துறவென்பது உறவைச் சுருக்கிக் கொள்வதல்ல. உலகளவு பரந்து விரிந்தாய் ஆக்கிக் கொளவதே துறவின் லட்சணம்.

உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் மட்டும் போதும். அதைதான் பணிவு என்றும் நமஸ்காரம் என்றும் சொல்கிறோம். தூய்மையில்லாத உள்ளத்துடன் நமஸ்கரித்தால் அதை ஓர் ஏமாற்றுச்செயல் என்றே சொல்ல வேண்டும். அது ஒரு அபசாரமும் கூட.

ஆனந்தம் அமையியில்தான் பிறக்கிறது. குழப்பமில்லாத மனதில் அமைதி நிலைபெற்று இருக்கும். குழப்பம், கலக்கம் ஆகியவற்றிற்கு மனதில் எழும் எண்ணங்களே காரணம்.
அருளின் உயர்ந்த வடிவம் மொனம். அதுவே மிக உயர்ந்த உபதேசம்.

மௌன விரதம் என்பது ஒரு விரதமே. அது தியானத்திற்கு ஓரளவு உதவும். ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலைபாய்வதில் என்ன பயன்?

சரணாகதி என்பதே வலிமை மிக்கப் பிரார்த்தனை கடவுள் நம்மைப் பற்றிய எல்லா செயல்களுக்கும் பொறுப்பேற்கிறார் என்ற நம்பிக்கை அவசியம். இது முழுமையாக நம்மைக் கடவுளிடம் அர்ப்பணித்து விடுவதில் இருக்கிறது.


நீங்கள் எதை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். ஆனால் அதனோடு திருப்தி அடைந்துவிடக்கூடாது. ‘துன்பத்தையோ, இன்பத்தையோ அனுபவித்தது யார் என்று உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். இன்பம், துன்பம் ஆகிய இரண்டையும் கடக்கும் வரை சாதனையைத் தொடருங்கள் இறுதியில் உண்மை மட்டுமே எஞ்சி நிற்கும்.

கலங்கிய மனதால், காமத்தினால் செய்யப்படுவதெல்லாம் தீய கரும்ம். சாந்தமான தூய மனதுடன் அனைத்தும் நற்கருமம்.

மரணத்திற்கு பிறகு என்ன என்பதற்கு விடை தேட வேண்டாம். நிகழ்காலத்தில் வாழ்வோம். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.

நீ விரும்புவதை எல்லாம் பகவான் உனக்கு தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு.

உலகம் மெய் என்ற அபிப்பாரய்த்தை விட்டொழிக்காவிட்டால், மனம் எப்பொழுதும் உலகத்தையே நாடி நிற்கும்.

”என்னுடைய மதம் இப்படி” என்று ஒரு மத்த்தின் மீது அபிமானமும் பிற மதங்களின் மீது துவேஷம்ம் கொள்ளச்செய்வது, அகந்தை தான், இதை விட்டொழிக்க வேண்டும்.

பலன் கருதா பக்தி என்பது சாத்யமே. அதற்கு உதாரணமாக பிரஹலாதனுடைய பக்தியையும், நாரதமுனிவரின் பக்தியையும் கூறலாம்.

சராணாகதி என்று பேசுவதெல்லாம் வெல்லத்தில் செய்த பிள்ளையாரைக் கிள்ளி சிறிது வெல்லத்தை எடுத்து, அந்த வெல்லப் பிள்ளையாருக்கே நைவேத்யம் செய்வது போலாகும்.

மூன்றாவது காஷாயம். இது முற்பிறவிகளில் அனுபவித்த புலன் நுகர்ச்சிகள் பற்றிய எண்ணங்களும் ஆசைகளும் ஆகும்.

புத்தி பூர்வமாக அறிந்திருப்பது அதிஞானம். அதாவது உறுதிப் படாத ஞானம் ஆகும். காலம் வரும் போது நீ திட ஞானத்தில் - அதாவது உறுதியற்ற ஞானத்தின் நிலை பெறுவாய். இதுதான் முடிவான உண்மை. தன்னை உணர்ந்திருப்பதே ஞானம் ஆகும்.


கடல் பொங்கினால் அற்ப ஜந்து தலையெடுக்க முடியாது. அதுபோல ஞான வெள்ளம் அற்பமான அகந்தை தோன்றாது.

நீ உன்னை அறிந்துகொள். உலகவினை தன்னாலே நடைபெறும். நடத்துவோன் நடத்துகிறான். நீ சாட்சியாக இரு. நான் என்று கூறிக்கொண்டு எதிலும் முன் நிற்காதே.

உலகம் மெய் என்ற அபிப்ராயத்தை விட்டொழிக்காவிட்டால் மனம் எப்பொழுதும் உலகத்தையே நாடி நிற்கும்.